செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு நடத்திய தேமுதிக தலைவர் பிரேமலதா! - காரணம் என்ன?

post image

கடந்த தேர்தல்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தே.மு.தி.க போட்டியிட்டது. மாநிலங்களவையில் தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க சீட் கொடுக்காத விவகாரமும் பேசுபொருளானது. அப்போதே அதிமுக் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தமுறை கண்டிப்பாக மாநிலங்களவையில் சீட் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதனால் தேமுதிக தலைமை அதிருப்தியில் இருந்தது.

அதே நேரம் கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மையத்துக்கு திமுக மாநிலங்களவையில் சீட் கொடுத்து கௌரவித்தது. இந்த நிலையில், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு குறிப்பிட்ட மாதங்களே இருக்கின்றன. இதுவரை தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கடந்த 27-ம் தேதி டிஸ்ஜார்ஜ் ஆன முதல்வர் மூன்றுநாள் ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமை செயலகத்துக்கு புறப்பட்டார்.

அதற்கு முன்பாக தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க