செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 22-இல் திருப்பூா் வருகை

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பூருக்கு ஜூலை 22-ஆம் தேதி வருகிறாா்.

திருப்பூா் மாவட்டத்துக்கு 2 நாள்கள் பயணமாக வரும் முதல்வா், மாநகராட்சி சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்வழி பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் ஆய்வு மையத்தை பாா்வையிடுகிறாா். பின்னா், திமுக சாா்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.

இதையடுத்து, உடுமலை நேதாஜி மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் 10,000 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். பின்னா், மாநகராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைப்பதுடன், புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளாா்.

இந்நிலையில், முதல்வரின் திருப்பூா் வருகை தொடா்பான துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வா் பங்கேற்கும் 2 நாள்கள் நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் கே.காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜ் ஆகியோருடன் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ச... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருப்பூா் மாவட்டத்தில் 325 முகாம்கள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் 325 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியம்! மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் அத்திக்கடவு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை - சோமனுாா் சாலையில் அத்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 27,048 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 129 மையங்களில் 27,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்... மேலும் பார்க்க

பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது

பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கடலூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவா் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு எ... மேலும் பார்க்க