செய்திகள் :

மும்பை: சிறுவன் மீது நாயை ஏவிக் கடிக்கவிட்டுச் சிரித்த நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

மும்பை மான்கூர்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் ஹம்சா (11) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்நேரம் மொகமத் சொஹைல் ஹசன் என்பவர் கொண்டு வந்த வளர்ப்பு நாய் ஆட்டோவில் ஏறியது.

இதனால் சிறுவன் பயத்தில் ஆட்டோ சீட்டின் ஓரத்திற்குச் சென்றான். ஆட்டோவில் ஏறிய நாய் சிறுவன் ஹம்சாவிற்கு அருகில் சென்று அவனைக் கடிப்பது போன்று நடந்து கொண்டது.

சிறுவன் பயத்தில் உதவி கேட்டு கத்தினான். ஆனால் ஆட்டோவில் இருந்த ஹசன் நாயைக் கட்டுப்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.

நாயின் ஆக்ரோஷத்தைப் பார்த்து சிறுவன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அதனால் அவனை நாய் கடித்துவிட்டது. அப்படி இருந்தும் நாய் உரிமையாளர் நாயைக் கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் ஆட்டோவில் இருந்து குதித்து வெளியில் ஓடினான்.

அப்படியும் அவனது சட்டையை நாய் கடித்து இழுத்தது. சிறுவன் தப்பித்து ஓடியபோது அவனை நாய் விரட்டி சென்றது. இச்சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. மாறாக அவர்கள் நடந்த சம்பவத்தைத் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் பிஸியாக இருந்தனர். அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

இச்சம்பவம் குறித்து ஹம்சா கூறுகையில், ''நாய் என்னைக் கடித்துவிட்டது. இதனால் தப்பி ஓடினேன். அப்படி இருந்தும் எனது சட்டையைக் கடித்தது. நாய் உரிமையாளரிடம் உதவி கேட்டேன். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை. அவர் சிரித்துக்கொண்டிருந்தார்'' என்று தெரிவித்தார்.

சிறுவனைத் தாக்கியது பிட்புல் என்ற ஒரு வகை வளர்ப்பு நாயாகும். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு ஹசனை அழைத்து விசாரித்தனர். ஒரு கும்பல் இதனை வேடிக்கையாகச் செய்ததாகப் பின்னர் தெரிய வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

வேலூர்: "மொட்டை மாடியில் இருந்து என் கணவர் தள்ளிவிட்டார்"- வரதட்சணைக் கொடுமை புகார் அளித்தப் பெண்

வேலூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், கை, கால் உடைந்த நிலையில், ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்ப... மேலும் பார்க்க

'ஊர் திருவிழாவில் மின்சாரத் திருட்டு'- ரூ.18,000 அபராதம் விதித்த மின்வாரிய அதிகாரிகள்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சியில் இருக்கும் அலங்காரிபட்டியில் பட்டவன் திருவிழா நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி விழாவான இன்று மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இந்த விழ... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சையால் படுக்கையில் ஆதீனம்; விசாரணைக்கு வந்த போலீஸ்; குவிந்த பாஜகவினர்; நடந்தது என்ன?

உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணைகடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடை... மேலும் பார்க்க

டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடுத்த இன்ஸ்டா சாட்டிங்

டெல்லி உத்தம்நகரில் வசித்தவர் கரண் தேவ் (36). இவரது மனைவி சுஷ்மிதா. கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் ஷாக் பட்டுவிட்டதாகக் கூறி கரண் தேவை அவரது மனைவியும், உறவினர்களும் அங்குள்ள ராணி ரூப்ராணி மரு... மேலும் பார்க்க

மதுரை: வரதட்சணை கேட்டு மனைவிக்குக் கொடூர சித்திரவதை; தலைமறைவான போலீஸ் கணவன் கைது

கூடுதலாக வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.கைதுதனியார்ப் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், மதுரை அப்பன் திருப்ப... மேலும் பார்க்க

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க