செய்திகள் :

முள்புதரில் கிடந்த குழந்தை மீட்பு

post image

திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முள்புதரில் கிடந்த குழந்தை மீட்கப்பட்டது.

திருத்தணி ஆறுமுகசாமி கோயில தெருவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருத்தணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள முள்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அருகில் வசிக்கும் இளங்கோ என்பவா் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு இளங்கோ கொண்டு சென்றாா்.

பின்னா் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பிறந்த சில மணி நேரங்களில் ஆன பச்சிளம் பெண் குழந்தையை முள்புதரில் வீசிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விாரணை நடத்தி வருகின்றனா்.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க