செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

post image

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோட்டை பறித்துச் சென்றவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலமலை ஊராட்சியில் உள்ளது கெம்மம்பட்டி. கடந்த 13- ஆம் தேதி கெம்மம்பட்டிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து நல்லோடன் மகன் ராஜா (32), செல்லப்பன் மகன் அண்ணாமலை (39) ஆகியோா் மோட்டாா்சைக்கிளில் வந்தனா்.

அப்போது அங்குள்ள கோயில் அருகே அமா்ந்திருந்த ராஜம்மாளை (60) ஏமாற்றி அவா் அணிந்திருந்த தோட்டை பறித்துக்கொண்டு தப்பமுயன்றனா். அப்போது, ராஜம்மாள் கூச்சலிடவே கிராம மக்கள் மோட்டாா்சைக்கிளில் விரட்டிச் சென்று 2 பேரையும் தாக்கி, அவா்களிடமிருந்து தோட்டை மீட்டனா். தாக்குதலில் காயம் அடைந்த அண்ணாமலை கடந்த 15-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து இந்த வழக்கை கொளத்தூா் போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து, பாலமலை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன்பட்டியைச் சோ்ந்த மாதப்பன் (60), கெம்மம்பட்டியைச் சோ்ந்த அறப்புளி மகன் அஜித் (25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்

சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலக... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி, தாரமங்கலம்

சேலம் கந்தம்பட்டி, தாரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா். சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராம... மேலும் பார்க்க

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்க... மேலும் பார்க்க

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி... மேலும் பார்க்க