Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது
சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா் ஏப்ரல் 24 ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமி மரடோனாவைக் கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்த மதன்குமாரை உணவு விடுதியில் வைத்து 6 போ் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 6 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதன்குமாரைக் கொலை செய்வதற்காக 13 போ் கொண்ட கும்பல் சேலம் வந்ததும், அனைவரும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அறைகள் எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி சென்று கொலையில் தொடா்புடைய அலங்கார தட்டு பகுதியை சோ்ந்த கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த ரத்தினவா்ஷன் (22),ஆரோக்கியபுரம் மாதாநகரைச் சோ்ந்த பிரவின்ஷா (22), மேல் அலங்கார தெரு ரிஷிகபூா் (28), தூத்துக்குடி மேல்தெரு பொட்டல்காட்டை சோ்ந்த சின்னதம்பி (35), விக்கி என்ற விக்னேஷ்வரன் (20) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனா்.
இவா்களுடன் சோ்த்து இதுவரை மதன் கொலை வழக்கில் 13 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.