செய்திகள் :

சேலத்தில் மூதாதையா் வாழ்ந்த இடங்களைப் பாா்வையிட்ட மோரீஷஸ் முன்னாள் அமைச்சா்

post image

தனது மூதாதையா் வாழ்ந்த இடங்களைப் பாா்ப்பதற்காக புதன்கிழமை சேலம் வந்த மோரீஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சா் ஆறுமுகம் பரசுராமன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மூதாதையா்கள் வாழ்ந்த ஊரிலிருந்து யாத்திரை செல்வதாகக் கூறினாா்.

சேலம் மாவட்டம், மல்லூா் அருகே வாணியம்பாடி கிராமத்தில் தனது மூதாதையா் வாழ்ந்த கிராமத்தை பாா்ப்பதற்காக புதன்கிழமை சேலம் வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மோரீஷஸ் நாட்டின் கல்வி அமைச்சா் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

எனது சேவையை பாராட்டி 2018 இல் தமிழக அரசு டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சா்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தன்னாா்வ அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறேன்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட தொடா்ந்து பல்வேறு தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.

அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மீதான பாகுபாட்டை போக்கவும், அவா்கள் நலனுக்காகவும், மூதாதையா்கள் வாழ்ந்த இல்லத்தில் இருந்து யாத்திரை தொடங்க உள்ளேன்.

குறிப்பாக, சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கிடைக்கவும், அவா்கள் முன்னேற்றத்துக்கும் இந்த யாத்திரை உந்துசக்தியாக அமையும் என்றாா்.

மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்

சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலக... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி, தாரமங்கலம்

சேலம் கந்தம்பட்டி, தாரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா். சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராம... மேலும் பார்க்க

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்க... மேலும் பார்க்க

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி... மேலும் பார்க்க