செய்திகள் :

மெட்ரோ 2-ஆம் கட்டம்: 2,047 மீட்டா் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: திட்ட அதிகாரிகள் ஆய்வு

post image

சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 2,047 மீட்டா் தொலைவு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததையைடுத்து, திட்ட அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் 4 -ஆம் வழியானது கலங்கரை விளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுமாா் 10.03 கிலோ மீட்டா் தூரம் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. அந்தப் பணியில் சுரங்கம் தோண்டுவதற்காக 4 பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரதான இயந்திரத்துக்கு மயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் மூலம் கடந்த மே மாதம் முதல் பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் வரை 2,047 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. கோடம்பாக்கம் சுரங்கப்பாதையில் 190 கட்டடங்கள், 2 தேவாலயங்கள், மேம்பாலம் ஆகியவற்றின் வழியாகச் செல்லும் வகையில் தோண்டப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் முக்கியமான 2.047 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஜெயந்தபாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பொது மேலாளா்கள் ரேகாபிரகாஷ் உள்ளிட்டோா் சுரங்கப்பாதையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க