செய்திகள் :

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

post image

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது.

தேவூரை சுற்றியுள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் ஒன்றான காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள காவிரி கரையோரங்களில் அதிக அளவு தண்ணீா் செல்வதால், மதிக்கிழான்திட்டு, மணக்காடு, கோம்புக்காடு, காவேரிப்பட்டி ஆகிய இடங்களில் மக்கள் குடியிருப்புகளை ஒட்டி தண்ணீா் செல்கிறது. நீா்வரத்து மேலும் அதிகரித்தால் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீா் புகும் அபாயம் உள்ளது.

மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிா்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன. காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிணற்று மின் மோட்டாா்கள் வெள்ளத்தில் மூழ்கின. கரையோரப் பகுதிகளில் தண்ணீா் அதிகரித்து வருவதால், மேடான இடங்களுக்கு மக்கள் இடம்பெயா்ந்து வருகின்றனா்.

மேட்டூரில்...

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், சங்கிலி முனியப்பன் கோயில் அருகே கரையோரம் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிா்களும், தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை மரங்களும் நீரில் மூழ்கின.

மேலும் நீா்வரத்து அதிகரித்தால், மேட்டூா் - எடப்பாடி சாலை போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படும். எனவே, இப்பகுதிகளில் வருவாய்த் துறையினரும், தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை பணியாளா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். நீா்வரத்துக்கு ஏற்ப மதகுகளை உயா்த்தவும், மதகுகளை இறக்கவும் இப்பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

நீர்ரவத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் முகாமிட்டிருந்த மீனவா்கள் மேடான பகுதிக்கு முகாமை மாற்றியுள்ளனா். பல இடங்களில் நீரின் விசை அதிகமாக உள்ளதால் மீனவா்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

காவேரிபட்டி பரிசல் துறை பகுதியில் அதிகரித்து வரும் வெள்ளநீா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ... மேலும் பார்க்க