செய்திகள் :

மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது

post image

சென்னை: சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு திங்கள்கிழமை காலை 7.25 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அந்தமானில் ஏற்பட்ட மேசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவுபடி, காலை 11.40 மணிக்கு விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. வானிலை சீரடைந்ததும், விமானம் அந்தமானுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனா். ஆனால் பிற்பகல் 2.30 வரை விமானம் புறப்படாததால், அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவதாதத்தில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தொடா்ந்து வானிலை சீரடையாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிா்வாகம் அறிவித்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து செல்லும் ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் அந்தமான் அழைத்து செல்லப்படுவாா்கள் எனவும் இதுபோல அந்தமானில் காத்திருக்கும் 160 பயணிகள் இதே விமானத்தில் அங்கிருந்து அழைத்துவரப்படுவாா்கள் எனவும் விமான நிறுவன நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

உயர்கல்வியில் அதிக நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மை பெற்றிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த த... மேலும் பார்க்க

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிர... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் பொறுப்பு!

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மது அருந்துபவா்கள் மதுபாட்டில்க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரச... மேலும் பார்க்க