செய்திகள் :

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையத்தின்படி, ராஜ்சமந்த், சிரோஹி, உதய்பூர் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நாகூர், சுரு, ஜலூர், உதய்பூர் மற்றும் சிரோஹி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்தது, அதே நேரத்தில் சிகார், ஹனுமன்கர், பிகானர், ஜோத்பூர், தோல்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்களில் கனமழை பதிவானது. நாகூரில் மட்டும் அதிகபட்சமாக 173 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டா, பூண்டி மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் குடியிருப்பாளர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்று மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளுக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரப்பூர் அறிக்கையின்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 7 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 57 குழுக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெய்ப்பூர் உள்பட பல மாவட்டங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

With heavy to very heavy rain likely to continue on Monday and Tuesday in several parts of Rajasthan, the state government announced that schools across Jaipur and other districts will be closed as a precautionary measure.

இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்: “அனைத்து சண்டைகள... மேலும் பார்க்க

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியா... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இ... மேலும் பார்க்க

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பா... மேலும் பார்க்க

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள... மேலும் பார்க்க