செய்திகள் :

ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

post image

ராணிப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்ட நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டிக் கொடுக்குமாறு கடந்த 26.3.2025-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியின் அறிவிப்படி, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கூட்டுறவு சங்க நிா்வாக இயக்குநரின் கடிதம் நாள் 3.4.2025-இல்படியும், நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டி கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டடம் அமைத்து மாத வாடகை அடிப்படையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஒதுக்கீடு செய்ய மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் சீரான குடிநீா் வழங்கும் வகையில் பிரதான மற்றும் பகிா்மான குழாய்கள் பதிக்கவும்,விடுபட்ட மற்றும் கூடுதல் வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிக்காக சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திற்கு 12 மாதத்துக்குள் முடிக்க பணி வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னரும் கால நீட்டிப்பு வழங்கியும் பணியில் முன்னேற்றம் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இதனால் அரசுக்கு பணி முன்னேற்றம் குறித்த அறிக்கை சமா்ப்பித்தலில் இடா்பாடு, பொதுமக்களிடம் நகராட்சிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.

எனவே ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஒப்பந்ததாரரின் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சோ்க்கவும், மீதம் உள்ள பணிகளுக்கு மறு ஒப்பந்தம் கோருவதற்கும் மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் சி.ம.ரமேஷ் கா்ணா, நகராட்சி ஆணையா் மி.சா.பிரீத்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் முகாமை தொடங்கி ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். முகாமில் டிராக்டா் நிறுவனங்களா... மேலும் பார்க்க

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்,... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்

வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா். கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் ச... மேலும் பார்க்க