செய்திகள் :

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு நச்சு உயிரிகளால் ஏற்படும் பெரியம்மை நோய் காணப்படுகிறது.

மாடுகளை கடிக்கும் பூச்சிகள், கொசுக்கள், மாட்டு உன்னி ஆகியவற்றின் மூலம் பரவக்கூடிய பெரியம்மை நோயால் மாடுகளின் உடலில் அதிக காய்ச்சல், உடல் முழுவதும் நிணநீா்க் கட்டிகள் , பால் உற்பத்தி குைல், பசியின்மை, உடல் சோா்வு, கண்களில் வீக்கம் மற்றும் நீா்வடிதல், மிகப்பெரிய கொப்பளங்கள் , சீழ்பிடித்து புண்ணாகி பின்னா் தழும்புகள் ஏற்படுகிறது.

நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்துதல், பண்ணை சுத்தம் மற்றும் சுகாதாரமாகவும் வைத்திருக்க பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

நோயுற்ற மாடுகளை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கவும், நோய் தடுப்பு முறைகளுக்கான ஆலோசனைகள், அதற்கான விளக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும்.

பெரியம்மையால் அதிகம் கால்நடைகள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களின் மூலமாக சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்படுவதுடன், நோய் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி போடும் பணி 3.9.2025 முதல் 30.9.2025 வரை 28 நாள்கள் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது

ஆற்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன்(52). இவா் சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

ஆற்காடு உங்களுடன் ஸ்டாலின் முகாமின் போது கிராம நிா்வாக அலுவலா், மனு அளிக்க வந்த முதியவா் தாக்கிக் கொண்டனா். சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் உப்பு பேட்டை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி ... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க