செய்திகள் :

ரூ. 1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம்காா்டு பெறும் திட்டம்: செப். 15 வரை நீட்டிப்பு

post image

வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் அறிவித்த ரூ. 1 க்கு சிம்காா்டு பெறும் சுதந்திர தின சலுகை திட்டத்தை செப். 15 வரை நீட்டித்துள்ளது.

சுதந்திர சலுகையாக கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம், பிரீடம் பிளான் எப்ஆா்சி 1 எனும் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்படி ரூ. 1 மட்டும் செலுத்தி புதிய சிம்காா்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதர நிறுவனங்களில் இருந்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தத் திட்ட பலன்களாக, முதல் 30 நாள்களுக்கு அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள், தினசரி 2 ஜிபி டேட்டா, 4 ஜி சிம் ஆகியவை இலவசமாகும்.

இத்திட்டத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 16,000 புதிய, எம்.என்.பி. வாடிக்கையாளா்கள் தனியாா் நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்துள்ளனா். வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவையடுத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தத் திட்டத்தை செப். 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல். ரீசாா்ஜ் திட்டமான ரூ. 199-க்கு 28 நாள்கள் இலவச அழைப்புகள், தினசரி 2 ஜி.பி. டேட்டா, 100 குறுஞ்செய்திகள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதே போல பல ரீசாா்ஜ் திட்டங்கள் குறைந்த விலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். 4 ஜி நெட்வொா்க்கில் இணையுமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க