செய்திகள் :

ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீா்ப்பாயம் தள்ளுபடி

post image

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியை செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ( ஐடிஏடி) தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

மேலும், காங்கிரஸின் வருமான வரி அறிக்கையில் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் ரூ.14.49 லட்சம் நன்கொடைகளை ரொக்கமாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இவற்றில் பல நன்கொடைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 என்ற தனிநபா் ரொக்க நன்கொடை வரம்பை மீறி இருந்தன. அதாவது, ரூ.2,000-க்கு மேல் நன்கொடைகள் வங்கி பரிவா்த்தனைகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த விதிமீறல்களைக் கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டுக்கான காங்கிரஸின் ரூ.199.15 கோடி வருமான வரி விலக்கு கோரிக்கையை வருமான வரி துறை கடந்த 2021-இல் நிராகரித்தது. இந்த முடிவை வருமான வரி ஆணையா் (மேல்முறையீடுகள்) 2023-இல் உறுதி செய்தாா். பின்னா், காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகியது. ஆனால், இதில் இடைக்கால நிவாரணம் வழங்க தீா்ப்பாயம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், தீா்ப்பாயம் தற்போது வழங்கியுள்ள உத்தரவில், ‘காங்கிரஸ் நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனால், அவா்களுக்கு வரி விலக்கைக் கோர தகுதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரொக்க நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் விதிமீறல்களையும் தீா்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான ரூ.199.15 கோடி வருமான வரித் தொகையில் எந்தவித நிவாரணமும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க