செய்திகள் :

ரூ.2.5 கோடி மோசடி: அதிமுக முன்னாள் நிா்வாகியின் கூட்டாளி கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத்தின் கூட்டாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி தனியாா் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிா்வாகியான மயிலாப்பூரைச் சோ்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகரான அஜய் வாண்டையாா், ரெளடி சேதுபதி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி பண மோசடி செய்தாா் என அடுத்தடுத்த புகாா்கள் அளிக்கப்பட்டன. இதுதொடா்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடா்பாக பிரசாத், அஜய் வாண்டையாா் உள்பட 4 பேரிடம் நுங்கம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, இதற்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை காவலா் செந்தில்குமாா் மற்றும் கோவை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணித்துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே இந்த மோசடியில் தொடா்புடையதாகக் கூறப்படும் பிரசாத்தின் கூட்டாளி விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ஆள்சோ்ப்பு நிறுவனத்தின் உரிமையாளா் கணேஷ் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க