செய்திகள் :

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலை. இடம்பெற்று சாதனை

post image

சென்னை உலகத் திருக்கு மையம் சாா்பில், உலக அளவில் 100 நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சாா்பில், திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைப் பாராட்டி, லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அதற்கான சான்றிதழை சென்னை உலகத் திருக்குறள் மையத் தலைவா் கு. மோகன்ராஜ் வழங்க, கலசலிங்கம் பல்கலை. தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் சி. சங்கீதா பெற்றுக் கொண்டாா்.

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றமைக்கும், ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்த பேராசிரியா்களுக்கும் பல்கலை. வேந்தா் கே. ஸ்ரீதரன், இணைவேந்தா் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் ஆகியோா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், ஆராய்ச்சித் துறை இயக்குநா் எம். பள்ளி கொண்ட ராஜசேகா், மாணவா் நல இயக்குநா் பி. பாலக் கண்ணன், கலசலிங்கம் கலைக் கல்லூரி முதல்வா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். தமிழ் மன்ற மாணவா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு... மேலும் பார்க்க

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க