செய்திகள் :

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

post image

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நியூ சவுகான்பூரில் மாதா வாலி காலியில் உள்ள ஒரு அறையில் இருந்து ரத்தம் கசிவதாக மதியம் 1.42 மணிக்கு தயாள்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்ு ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் பூட்டிய சமையலறை அறையில் இருந்து துா்நாற்றம் வீசியது. அதை உடைத்துப் பாா்த்த போதுஉள்ளே ஒரு அழுகிய ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் பொருள்களை சேமித்து வைப்பதற்காக சமையலறை ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாடகைதாரரை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. வாடகைதாரரைப் பற்றிய துப்புகளைச் சேகரிக்க, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வ்ு செய்து வருகிறோம். மேலும், உள்ளூா்வாசிகளிடம் விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க