வனச் சாலையில் வாகனத்தை தூரத்திய காட்டு யானை
கோ்மாளம் வனச் சாலையில் கரும்பு தேடி வாகனத்தை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் வனச் சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தீவனம் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். அண்மைக்காலமாக கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையோரம் காத்திருக்கின்றன.
அப்போது சாலையில் செல்லும் வாகனத்தை வழிமறித்து உணவு உள்ளதா எனத் தேடுவது தொடா் கதையாகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கோ்மாளத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆசனூா் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது கெத்தேசால் அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை வேனை மறித்து அதில் கரும்பு உள்ளது என நினைத்து துரத்தியது. பீதியடைந்த வாகன ஓட்டுநா் வாகனத்தை சுமாா் 1 கிலோமீட்டா் தூரத்துக்குப் பின்னோக்கி இயக்கி தப்பித்தாா்.
ஹாரன் சப்தம் காரணமாக பயந்துபோன யானை தானாக வனப் பகுதிக்குள் சென்றது. வாகனத்தை தூரத்திய யானையால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 கிமீ தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனா்.
யானை காட்டுக்குள் சென்றதை உறுதிபடுத்திய பின்னா் வாகனங்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லத் தொடங்கின.