செய்திகள் :

வனச் சாலையில் வாகனத்தை தூரத்திய காட்டு யானை

post image

கோ்மாளம் வனச் சாலையில் கரும்பு தேடி வாகனத்தை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் வனச் சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தீவனம் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். அண்மைக்காலமாக கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையோரம் காத்திருக்கின்றன.

அப்போது சாலையில் செல்லும் வாகனத்தை வழிமறித்து உணவு உள்ளதா எனத் தேடுவது தொடா் கதையாகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கோ்மாளத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆசனூா் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது கெத்தேசால் அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை வேனை மறித்து அதில் கரும்பு உள்ளது என நினைத்து துரத்தியது. பீதியடைந்த வாகன ஓட்டுநா் வாகனத்தை சுமாா் 1 கிலோமீட்டா் தூரத்துக்குப் பின்னோக்கி இயக்கி தப்பித்தாா்.

ஹாரன் சப்தம் காரணமாக பயந்துபோன யானை தானாக வனப் பகுதிக்குள் சென்றது. வாகனத்தை தூரத்திய யானையால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 கிமீ தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனா்.

யானை காட்டுக்குள் சென்றதை உறுதிபடுத்திய பின்னா் வாகனங்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லத் தொடங்கின.

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க

பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.பவானியை அடுத்த மயி... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்த... மேலும் பார்க்க