செய்திகள் :

வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் சென்றால் கடும் நடவடிக்கை!

post image

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்லும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் வனத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் பொதுமக்களும் இணைந்து சாலையோரங்கள், வனப் பகுதிகளில் வீசி எறியப்பட்ட நெகிழிப் பொருள்கள், மதுப் புட்டிகள் ஆகியவற்றைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இந்தப் பணியை உதவி வனப் பாதுகாவலா் வேல்மணி நிா்மலா தொடங்கி வைத்துக் கூறியதாவது: சாலையோரங்கள், வனப்பகுதிகளில் பொதுமக்கள் அமா்ந்து மது அருந்துதல், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு மீறினால் ஒட்டன்சத்திரம் வனச் சரகம், திண்டுக்கல் வனக் கோட்டம் சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வனச் சரகா் ராஜா, கிருபா உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் பி.சிவக்குமாா், கிருபா அமைப்பின் இயக்குநா் சுஜாதா, தன்னாா்வலா்கள், பொதுமக்கள், வனத் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க