செய்திகள் :

வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே வேளம்பூண்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த செப்.2 ம் தேதி மாலை ணிக்கு அநுஜ்ஞை,, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3-ம் தேதி புதன்கிழமை காலை கும்ப ஸ்தாபனம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால ஹோம பூஜையும், மாலை இரண்டாம் கால ஹோம பூஜைகளும், 4-ம் தேதி தேதி வியாழக்கிழமை காலை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சியும், மூன்றாம் கால யாக பூஜை ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் யாகசாலையில் இருந்து புனித நீா் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானக் கலசத்தை அடைந்து கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீ நிவாஸாசாா்யா் சா்வ ஸாதகம் புலவா் க.கோஸகன் பட்டாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தாா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கருணாநிதி, அறங்காவலா்கள் ஜே.மகேஸ்வரி, ஜெயராமன், எஸ்.ரமேஷ், ரெட்டியூா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க