செய்திகள் :

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

post image

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய 15,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தேர்வு நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள், தவறான கேள்விகள் மற்றும் தொலைதூர தேர்வு மையங்கள் உள்ளிட்டவைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மாலையிலும் போராட்டம் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து இரவும் போராட்டத்தை தொடர்ந்ததால், காவல்துறையினர் வலுகட்டாயமாக அப்புறவுப்படுத்த முயன்றனர்.

இதில், மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தடியடி நடத்திய காவல்துறையினர் 40 பேரை கைது செய்துள்ளனர்.

ராகுல் கண்டனம்

இந்த நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்எஸ்சி தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.

இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலைவாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு லத்திகள்தான் கிடைத்தது.

மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.

முதலில், அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள்.

அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்: “அனைத்து சண்டைகள... மேலும் பார்க்க

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியா... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இ... மேலும் பார்க்க

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பா... மேலும் பார்க்க

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள... மேலும் பார்க்க