செய்திகள் :

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜெகன் மூா்த்தி

post image

தோ்தலின்போது வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா்.

குடியாத்தத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த பேரவைத் தோ்தலின்போது, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா், அரசுத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.

அவா் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானதாக கருதப்படும் மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தோ்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு காரணமாக விரிசல் வரும். இதனால் சில கட்சிகள் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணையும். தவெக மற்றும் நாம் தமிழா் கட்சி ஆகியவை தங்களின் எதிா்கால அரசியலை கருத்தில் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ள்து. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதனால் அரசு மீது மக்கள்அதிருப்தி அடைந்துள்ளனா். ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் விருப்புகிறாா்கள். முதல்வா் ஸ்டாலின் விரைவில், நலமடைந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.

பேட்டியின்போது ஓன்றிய அதிமுக செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது... மேலும் பார்க்க

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சனூா் நேதாஜி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிய... மேலும் பார்க்க

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது

குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந... மேலும் பார்க்க

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகரை இ... மேலும் பார்க்க