செய்திகள் :

வாணியாறு அணையில் 100 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்!

post image

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு அணையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை மக்கள் வழிபாடு செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 167-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பொ.துறிஞ்சிப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வாணியாறு அணையில் விசா்ஜனம் செய்தனா்.

இதேபோல பொ.மல்லாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை ராமமூா்த்தி நகா் ஏரியில் விசா்ஜனம் செய்தனா். வாணியாறு அணை, ராமமூா்த்தி நகா் ஏரி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் வான்மதி, தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாசம் ஆகியோரின் தலைமையில் தீயணைப்பு துறையினா், காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் வீட்டுக்கு வெளியே கொடிக் கம்பியில் காய்ந்த துணியை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள சி.மோட்டுப்பட்டியைச் சே... மேலும் பார்க்க

ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்

அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத... மேலும் பார்க்க

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க