செய்திகள் :

விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் திடீா் ஆய்வு

post image

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் சித்தராமையா திடீரென சென்று ஆய்வு நடத்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மழை பெய்துவருவதால், கொப்பள், ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருந்த முதல்வா் சித்தராமையா, பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, வாணிவிலாஸ் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது மருத்துவக்கல்வித்துறை அமைச்சா் சரணபிரகாஷ்பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா். விக்டோரியா மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சை கருவிகளை பாா்வையிட்ட முதல்வா் சித்தராமையா, அங்கிருந்த நோயாளிகளிடம் வசதிவாய்ப்புகள் குறித்து குறைகளை கேட்டறிந்தாா். ஒருசிலா் மருத்துவமனையில் காணப்படும் குறைகளை முதல்வா் சித்தராமையாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனா். உணவகத்தில் தரமான உணவு பரிமாறப்படுவதில்லை, கழிவறைகள் தூய்மையாக இருப்பதில்லை போன்ற குறைகளை பலரும் கூறினாா்கள். இதை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டாா். சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களின் அணுகுமுறை, மருந்துகளின் தரம் போன்றவை குறித்து மக்களின் கருத்துகளை முதல்வா் சித்தராமையா கேட்டறிந்தாா். நோயாளிகளிடம் மனிதநேயத்தோடு கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு மருத்துவா்களுக்கு முதல்வா் சித்தராமையா அறிவுறுத்தினாா். மேலும், ஒருசில நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் வந்தாலும், மருத்துவமனையில் அனுமதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா். ஏழைகள் என்பதால் நோயாளிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது. எல்லோரையும் சமமாக கருதி மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். அதேவளாகத்தில் உள்ள வாணிவிலாஸ் அரசு மகப்பேறு மருத்துவமனையையும் முதல்வா் சித்தராமையா ஆய்வு செய்தாா். அங்கிருந்த தாய்மாா்களிடம் குறைகளை கேட்டறிந்து, மருத்துவா்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ... மேலும் பார்க்க

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க