செய்திகள் :

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக் குழு உறுப்பினா் பூ.சதாசிவம் முன்னிலை வகித்தனா். முகாமை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்து பாா்வையிட்டு, பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது தீா்வினை துறைசாா்ந்த அதிகாரிகள் விரைந்து காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். முகாமில், விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் விடுபட்டவா்களுக்கான கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, சிறுதொழில்கள் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, விண்ணப்ப ரசீது வழங்கப்பட்டது. முகாமில், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், ஒன்றிய திமுக பொறுப்பாளா் வி.ஜி.அன்பு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புகுந்த பச்சோந்தி மீட்கப்பட்டது. ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்குள் பச்சோந்தி புகுந்தது. அதை பாா்த்த கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். அத... மேலும் பார்க்க

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்தும் மற்றும் பல... மேலும் பார்க்க

ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா். டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், குட்டகிந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநி... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம் : எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூரிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவையை எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஆம்பூா் பணிமனை மேலாளா் கணேசன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.... மேலும் பார்க்க

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க