செய்திகள் :

விமானம் ரத்தானதால் தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

post image

விமானம் ரத்து ஆனதால் அந்த விமானத்தில் சென்று பல்கலைக்கழகத் தேர்வு எழுதத் திட்டமிட்டிருந்த பயணியொருவர் பாதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க வாடிக்கையாளர் குறைதீர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையிலுள்ள காத்கோபார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பையிலிருந்து தார்பாங்காவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்றுள்ளார். அதன்பின் திருப்பிவர, அதே நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிசம்பர் 8-ஆம் தேதி அவர் மும்பைக்கு வந்தடைய திட்டமிட்டிருந்தார். அன்றைய நாளில் அவர் முனைவர் பட்டம் பெறுவதற்கான தேர்வு மும்பையில் நடைபெறவிருந்தது.

இந்தநிலையில், எதிர்பாராத விதமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரால் அந்த விமானத்தில் மும்பைக்கு திட்டமிட்டபடி செல்ல இயலாத சூழல் உருவானது. இதனால் ஸ்தம்பித்த பயணி விமான நிறுவனத்திடம் மாற்று வசதி ஏற்பாடு செய்யக் கோரியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு ஒரு விமானத்திலும் அதன்பின் அங்கு இறங்கி கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வேறொரு விமானத்திலும் என இரு டிக்கெட்டுகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் புக் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை பெற்றுக் கொண்டு அவசர அவசரமாக கொல்கத்தா சென்று இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மும்பைக்கு செல்லும் விமானம் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து புகாரளித்துள்ளார். அப்போது, அவர் பயணித்த கொல்கத்தா விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கும் முன்னரே, மும்பை செல்லும் விமானம் புறப்படும் என்றுஅந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததை விளக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர், மேற்கண்ட விமான சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி மும்பையிலுள்ள மாவட்ட வாடிக்கையாளர்கள் குறைதீர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், விமான நிறுவனம் மீது தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட பயணிக்கு டிக்கெட் கட்டணத்துடன் ரூ. 30,000 நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!

இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்க... மேலும் பார்க்க

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிக... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற யுஎம்இஇடி வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த அமைச... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க

பி-2 விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதா?

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக பரவும் தகவலை மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு மறுத்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையே ஒரு வாரத்து... மேலும் பார்க்க