செய்திகள் :

விருதுநகர் : `விலை உயர்ந்த டூவீலர் வாங்க லோடு ஆட்டோ திருடிய இளைஞர்கள்' - 3 பேர் கைது

post image

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக லோடு ஆட்டோவை திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "காரியாப்பட்டி நான்கு வழிச்சாலை அருகே லிங்கசாமி என்பவர் ஆர்.ஓ. குடிநீர் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். தொழில் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தண்ணீர் லோடு ஆட்டோ மூலமாக கிராம் கிராமமாக எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி ஆர்.ஓ. நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோ மாயமானது. இதுகுறித்து லிங்கச்சாமி காரியாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, ஆட்டோ திருடிக் சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் அருகே, மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான லோடு ஆட்டோ நிற்பதாக போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், ஆட்டோவை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டுவந்தனர். இதையடுத்து, லோடு ஆட்டோ கண்மாய் அருகே கொண்டுச் செல்லப்பட்டது எப்படி?, ஆர்.ஓ. நிலையத்திலிருந்து ஆட்டோவை யார் திருடிக் சென்றது என விசாரிக்கையில் பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (வயது 24) என்பவர் ஆட்டோவை திருடிக் சென்றது தெரியவந்தது.

லோடு ஆட்டோ

அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலைக்கு சேர்ந்த அஜய், அடுத்த சில வாரங்களிலேயே வேலையை உதறிச் சென்றுவிட்டார். தொடர்ந்து, அவரின் நண்பர்களான பணிக்கனேந்தலை சேர்ந்த அருண் பாண்டியன் (23), பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) ஆகியோருடன் கூட்டுச்சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் விலையுயர்ந்த டூவீலர் வாங்க நினைத்த அஜய், அதற்கான பணத்தை தயார் செய்ய ஆர்.ஓ.நிலைய லோடு ஆட்டோவை திருடி விற்க திட்டம் தீட்டியுள்ளார்.

காவல்நிலையம்

அதன்படி, அஜய் மற்றும் அவரின்‌ நண்பர்கள் என மூன்று பேரும் சேர்ந்து லிங்கச்சாமியின் ஆர்.ஓ.நிலையத்தில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவை நள்ளிரவில் திருடிச்சென்றுள்ளனர். லோடு ஆட்டோவை, அப்படியே விற்றால் போலீஸிடம் சிக்கி கொள்வோம் என்பதற்காக, ஆட்டோ பாகங்களை தனித்தனியே பிரித்து விற்பனை செய்ய அஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆட்டோவை, எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் பகுதிக்கு எடுத்துச்சென்று பதுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில்தான் லோடு ஆட்டோ கேட்பாராற்று கண்மாய் அருகே நிற்பது போலீஸூக்கு தெரியவந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து, அஜய், அருண்பாண்டியன், சக்தி முருகன் ஆகிய 3 பேரையும் காரியாப்பட்டி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்" என கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர்.... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுப்பு; போலீஸ் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வெங்கடேஷுக்கு ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு இரண்டாவது முறை... மேலும் பார்க்க

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அத... மேலும் பார்க்க