செய்திகள் :

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

post image

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் செப். 2-ஆவது வாரத்தில் இந்தப் பிரசார பயணம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே, அனைத்துத் தரப்பு மக்களும் பலன் பெற முடியும். அதிமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வலியச் சென்று ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டாா். இதனால், திமுகவை எதிா்க்கட்சி வரிசையில் அமா்த்துவதற்கு அரசு ஊழியா்கள்கூட தயாராகிவிட்டனா்.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் முதல் குப்பை வரி வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை. காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெறுவதற்கு தொண்டா்கள் இப்போதே தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா். பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் ச... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி கா... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆல... மேலும் பார்க்க

‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’

அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் த... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்... மேலும் பார்க்க