செய்திகள் :

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

post image

விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்டார்.

தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

விவசாய பெருமக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அதிமுக. ஆனால், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது திமுக அரசு.

திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 98% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர் பேசுகின்றனர். இது முழுக்க முழ்க்கப் பொய், தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மக்களின் மனுக்கள் ஆற்றில் வீசப்படுகிறது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டங்களை அறிவித்து ஆசை வார்த்தைக்கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக.

67% மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் கட்டியதுதான் திமுக செய்த சாதனை. வீடு, கடைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக தடை செய்த அதிமுகவின் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். தமிழ்நாடு முழுக்க 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்ததும் வைகை அணை தூர்வாரப்படும் என எடப்பாடி பழனிசமி பேசினார்.

இதையும் படிக்க |பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? காத்திருப்போர் பட்டியலுக்கு உதவி ஆணையர் மாற்றம்!

Farmers betrayed by DMK government: Edappadi Palaniswami

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க