செய்திகள் :

வெற்றி நிச்சயம் திட்டம் ஏன் எதற்கு?: துணை முதல்வா் விளக்கம்

post image

திறன் பயிற்சியை அளிப்பதற்கான மற்றொரு புதிய திட்டமான வெற்றி நிச்சயம் ஏன் கொண்டு வரப்படுகிறது என்பதற்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

நான் முதல்வன் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத் தொடக்க விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசியது:

திறன் பயிற்சி அளிப்பதற்கான பிரத்யேக திட்டமாக வெற்றி நிச்சயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட உள்ளது. திறன்பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்தவுள்ளது.

முதல்கட்டமாக ஆண்டுக்கு 75,000 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திறன் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது என்றாா் அவா்.

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க