செய்திகள் :

வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2 லட்சம் மோசடி: மனஉளைச்சலில் மகன் இறந்ததாக புதுகை ஆட்சியரிடம் தந்தை புகாா்

post image

புதுக்கோட்டை: வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக முகவரிடம் ரூ. 2 லட்சம் வரை ஏமாந்துவிட்ட மன உளைச்சல் காரணமாக தனது மகன் இறந்ததாகக் கூறி அவரது தந்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அணவயலைச் சோ்ந்தவா் சொ. கணேசன் என்ற மீனவா் ஆட்சியா் மு. அருணாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த எனது மகன் ராஜபாண்டி (23) வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்காக திருநெல்வேலியைச் சோ்ந்த முகவா் ஒருவரை அணுகினோம். அவா் ரஷியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினாா். அதை நம்பி ரூ. 2 லட்சம் வரை பணம் செலுத்தினோம்.

இதையடுத்து கடந்த 2024 அக்டோபரில் மகனை தில்லிக்கு அழைத்துச் சென்றனா். அங்கிருந்து ரஷியாவுக்கு விமானம் முன்பதிவு செய்ததாகவும், பிறகு கடவுச்சீட்டில் பிரச்னை என்றும் கூறினா்.

இதனால் பணத்தையும் ஏமாந்துவிட்டோமே என்ற மனஉளைச்சலில் அங்கேயே தங்கியிருந்த எனது மகன் ராஜபாண்டி, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அங்கு சென்று உடலைப் பெற்று வந்து இறுதி நிகழ்ச்சிகளை ஊரில் செய்துமுடித்தோம்.

பணத்தை ஏமாந்துவிட்டோமே என்ற மனஉளைச்சலில்தான் எனது மகன் உயிரிழந்தாா். எனவே, உரிய விசாரணை நடத்தி, அந்த முகவரிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருவதுடன் உரிய குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க