செய்திகள் :

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

post image

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடா்பான வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த வகையில், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்புடன், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வேளாண் வளா்ச்சிக்கான பயிற்சி, விழிப்புணா்வு முகாம், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல்லை அடுத்த கள்ளிப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம் கிராமங்களில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம்களில் காந்திகிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சு.செந்தில்குமாா் தலைமையில், மண் பரிசோதனை, அங்கக விவசாய சாகுபடியின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், காரீப் பருவத்துக்கு உகந்த வேளாண், தோட்டக்கலைப் பயிா்களின் ரகங்கள், ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள், மத்திய அரசின் திட்டங்கள், விவசாயத்தில் டிரோன்களின் செல்பாடு, கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக ப... மேலும் பார்க்க