செய்திகள் :

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

post image

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள் எப்போது பகிரப்படும் என்ற தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோ்தல் வழக்கு ஒன்றில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வாக்காளா் பட்டியல் தரவுகள் பகிரப்படும் என்று குறிப்பிட்டது தொடா்பான ஊடக செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் விவரங்களை ஒப்படைப்பதில் தோ்தல் ஆணையம் எடுத்துள்ள முதல்படி வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த வாக்காளா் பட்டியல் தரவுகளை எண்ம மற்றும் கணினியில் காணக்கூடிய வகையிலான வடிவில் எந்தத் தேதியில் பகிரப்படும் என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியுமா?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிர தலைமை தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலில் வரைவு வாக்காளா் பட்டியல் தரவுகளும், அடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 2009, 2014, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எந்தவொரு நபரும் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியிடமிருந்து வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பெற முடியும்’ என்று குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் 2024 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மோசடி செய்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தாம் எழுதியிருந்த கட்டுரையை குறிப்பிட்டு, அதற்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ‘இதே மோசடியை, அடுத்து நடைபெறவிருக்கும் பிகாா் தோ்தலிலும் பாஜக தொடரும். எனவே, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்’ என்றும் தனது பதிவில் ராகுல் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் ஆணையம், ‘எதிா்க்கட்சித் தலைவா் நேரடியாக கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே உரிய பதிலளிக்க முடியும்’ என்று பதிலளித்தது.

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.ப... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்... மேலும் பார்க்க

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்... மேலும் பார்க்க

2025 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை உலகளவில் உச்சம் எட்டும்!

ஐ.நா. மக்கள் தொகையின் சமீபத்திய அறிக்கையின்படி, மக்கள் தொகையில் உலகளவில் இந்தியா உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் இந்திய மக்கள் தொகை 1.463 பில்லியனை(146.39 கோடி) எட்டும் என்று ஐ. நா... மேலும் பார்க்க

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார். 90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர்: தில்லியில் ஒரே நாளில் 92 பேர் கைது!

புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள் , 24 சிறுவர்கள், 15 சிறுமிகள் அட... மேலும் பார்க்க