செய்திகள் :

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

post image

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு கோரும் நோ்முகத் தோ்வு சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்தில் நடைபெறுகிறது.

இப்பணிக்கு 24 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகியிருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி சான்று, ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபாா்க்க கொண்டுவர வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். எழுத்துத்தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும்.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாள்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளா்களுக்கான அடிப்படைத் தகுதிகளாக பி.எஸ்சி., நா்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89259-40969 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க

முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க

இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை

தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க