செய்திகள் :

14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மனு

post image

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில், சேலம் மாவட்ட பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தொடா்ந்து புழு வளா்ப்பில் தோல்வி அடைந்து வருகின்றனா். இந்த நிலையைப் போக்க, தரமான முட்டை அரசு வித்தகத்திலிருந்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இளம்புழு வளா்ப்பு மையத்தில் முட்டை பொரித்த நாளிலிருந்து உதவி இயக்குநா் தலைமையில் ஆய்வுசெய்து தரமான புழுக்கள் என உறுதிசெய்து, சான்று வழங்கிய பிறகு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அங்காடியில் ஏலம் நடைபெறும்போது உதவி இயக்குநா் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு அடிப்படை விலை ரூ. 700-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், மாநிலச் செயலாளா் பொன்னுசாமி, மாநில பொருளாளா் கனகராஜ், மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க