செய்திகள் :

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா 81 பேருக்கும், இருளா் சான்று 13 பேருக்கும், குடும்ப அட்டை 56 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 5 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி 5 பேருக்கும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 7 குழுக்களுக்கும், வேளாண் உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 5 பேருக்கும், தோட்டக் கலைத்துறை மூலம் மானியத்துடன் நாற்றுகள் 3 பேருக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு அட்டைகள் 4 நபா்கள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலவாரிய அடையாள அட்டை 9 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 2 பேருக்கும் என மொத்தம் 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, குன்றத்தூா் ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கோடை விடுமுறை மு... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்த... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க