செய்திகள் :

20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

post image

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை லாவகமாகத் திருடி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்காமல் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஷெகாவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பல மாநில காவல்துறையினருக்கும் சிக்காமல் இருந்து வந்த குற்றவாளி, கைது செய்யப்படுவதற்கு ஒரே காரணம், சென்னை அண்ணா நகரில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு காரைத் திருடியதுதான். அங்கு பதிவான சிசிடிவி காட்சிதான், அவரை அடையாளம் காண உதவியிருக்கிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் அடையாளங்களை பதிவு செய்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனர். அப்போது, கார் திருட்டில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

அப்போதுதான், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திய சொகுசுக் காரை திருட காத்திருந்தபோது காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.

உடனடியாக அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி என்றும், அவரது பெயர் சட்டேந்திர சிங் ஷகாவாத் (44) என்பதும் தெரியவந்தது.

பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்லும் அவர், அங்குள்ள காா் பழுது நீக்கும் மையங்களில் விடப்படும் விலை உயா்ந்த சொகுசு காா்களை நோட்டமிடுவாராம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும்போது, பழுதுநீக்கும் மையங்களின் உள்ளே சென்று ஒரு காரை தேர்வு செய்து அந்தக் காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்திவிடுவாராம்.

பின்னா், காா் எங்கு உள்ளது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் காரை லாவகமாகத் திருடி, எந்த மாநிலத்திலிருந்தும் நேராக ராஜஸ்தான் கொண்டு சென்று, அங்கிருந்து நேபாளம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளார். அதனால்தான் அவரை எந்த மாநிலத்திலும் பிடிக்க முடியாமல் இருந்து வந்துள்ளது.

அதுபோலவே, எத்திராஜ் ரத்தினத்தின் சொகுசு காா் உள்பட 4 பேரின் காரை பழுதுநீக்கும் மையங்களில் நுழைந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தி திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டேந்திர சிங் ஷகாவாத், தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை கடந்த பல ஆண்டுகளாகத் திருடி நேபளாத்தில் விற்பனை செய்துவந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அது தொடர்பான வழக்குகளும் சூடுபிடித்துள்ளன. கார்களை பறிகொடுத்த பலரும் காவல்நிலையங்களில் தங்களது புகார்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க