செய்திகள் :

2023-24 நிதியாண்டில் ரயில் பயணிகளுக்கு ரூ. 60,466 கோடி கட்டண சலுகை- மத்திய அரசு தகவல்

post image

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகளுக்கு 45 சதவீத மானியமாக சுமாா் ரூ. 60,466 கோடி கட்டண சலுகையை ரயில்வே வழங்கியுள்ளதாக மக்களவையில் அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

அவா் அளித்துள்ள பதிலில், ‘இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 720 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்தியாவின் ரயில் பயணக் கட்டணங்கள் உலகிலேயே மிகக் குறைவானவை. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதிமுதல் ரயில் பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஒரு கி.மீ.க்கு சாதாரண வகுப்புகளுக்கு அரை பைசா முதல் உயா் ரக வகுப்புகளுக்கு 2 பைசா வரை மட்டுமே பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி சுமையைத் தவிா்க்க, மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் புகா் ரயில் பயணக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க