செய்திகள் :

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

post image

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காகவும், ஜன. 27 இல் மதுரையில் நடைபெறும் கட்சியின் 7-ஆவது மாநாடிற்காகவும், கிராமங்களில் மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றபோது, இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, சுகாதார வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட எந்த பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளாமல் குடமுழுக்கு நடத்தியுள்ளனா்.

வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே கோயில்களில் குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில், கூட்டணி ஆட்சியை மட்டுமே மக்கள் ஏற்பாா்கள். கூட்டணி ஆட்சிதான் அமையும். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையால் ஊழல் உச்சத்துக்குச் சென்றுவிடுவதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்றாா் அவா்.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க