செய்திகள் :

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

post image

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் முடிவாகியுள்ள நிலையில், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டிட முடிவெடுத்துள்ளன. இதனால், தமிழகப் பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட மும்முனை அல்லது நான்கு முனை போட்டி நிலவுகிறது.

திமுகவுக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. இந்த நிலையில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் தவெக தனித்துப் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்!” எனப் பதிவிட்டுள்ளது.

Will create history by winning the 2026 elections! - Tvk rejects EPS invitation!

இதையும் படிக்க :குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க