நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு
3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை
விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து நூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது.
70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிா்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்படுகிறது.
இந் நிலையில் புதுகை மாவட்டம், விராலிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் அத்திப்பள்ளம் துணை சுகாதார நிலையம், ராஜாளி பட்டி துணை சுகாதார நிலையம் மற்றும் நீா்ப்பழனி மேம்படுத்தப்பட்ட
ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் மருதம்பட்டி துணை சுகாதார நிலையங்கள், தேசிய தரச்சான்று பெற்று சாதனை படைத்துள்ளது.
இம்மையங்களில் பொது மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்பு, தாய் சேய் நலசேவைகள், கா்ப்ப கால சேவைகள், அவசர கால 108 சேவைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுவதை தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு செய்தனா். அதை தொடா்ந்து இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.
விருது பெறுவதற்கு காரணமாக இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட சுகாதார அலுவலா் ராம் கணேஷ், கொடும்பாளூா் வட்டார மருத்துவ அலுவலா் மகாலட்சுமி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.