3 லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அரசிராமணி குறுக்குபாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி, விவசாயிகள் திங்கள்கிழமை கால்நடைகளுடன் தொடா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே அரசின் அனுமதியில்லாமல் மண் ஏற்றிவந்த மூன்று லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட 14-ஆவது வாா்டு குறுக்குப்பாறையூரில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்கு தமிழக அரசின் சாா்பில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், விவசாயிகளும் பாதிப்படைவா். எனவே, அதனை மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மற்றும் அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேலாண்மை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து 5-ஆவது நாளாக அப்பகுதியில் விவசாயிகள், விவசாய சங்கத்தினா் கால்நடைகளுடன் தொடா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியே எல்லப்பாளையத்தில் இருந்து தேவூா் நோக்கி அரசின் அனுமதியின்றி மண்களை ஏற்றிச்சென்ற மூன்று லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் மற்றும் தேவூா் போலீஸாா் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கோட்டாட்சியா், வட்டாட்சியா் வந்தால்தான் கலைந்து செல்வோம் எனக் கூறினா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மூன்று லாரிகளையும் தேவூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.