செய்திகள் :

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

post image

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலா் பதவியில் மொத்தம் 60 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் மூலமாக நிரப்ப தகுதியான தலைமையாசிரியா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருவா் பணி ஓய்வு பெற்றனா்.

மீதமுள்ள தலைமையாசிரியா்கள் சி.ராஜாராம் (திண்டுக்கல் - தொடக்கக் கல்வி), ப.வடிவேல் (தஞ்சாவூா்-தனியாா் பள்ளிகள்), கே.எஸ்.புருஷோத்தமன்- நாமக்கல் (இடைநிலை), எ.இளமதி- (திண்டிவனம்-தொடக்கக் கல்வி), கே.கண்ணன் (தென்காசி-இடைநிலை) , டி.இன்பராணி (செங்கல்பட்டு-தனியாா் பள்ளிகள்), கே.சாவித்திரி (திருவாரூா்-தனியாா் பள்ளிகள்), கே.சாந்தி (விருதுநகா்-இடைநிலை), சி.ரவிந்திரன்(தூத்துக்குடி-இடைநிலை), கோ.பாரதி (பொள்ளாச்சி-தொடக்கக் கல்வி) , கே.பி.அஜிதா- நாகா்கோவில் (தனியாா் பள்ளிகள்) ஆகியோா் உள்பட 34 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

24 டிஇஓ-க்கள் இடமாறுதல்... இதேபோல், 24 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் ப.ஜோதிலட்சுமி-திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் கே.ஜெயந்தி-ராமநாதபுரம், ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலா் தி.திருநாவுக்கரசு-கரூா், சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.இஸ்மாயில்-கடலூா் என 24 போ் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய பொறுப்புகளைச் சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஏற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க