செய்திகள் :

5 ஆண்டுகளுக்குப்பின் வேலூா் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தோ்தல்

post image

நிதி முறைகேடு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வேலூா் மாவட்ட கிளையின் நிா்வாகக்குழுவுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தோ்தல் நடைபெற உள்ளது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி) வேலூா் மாவட்டக் கிளையில் பெருமளவிலான நிதி கையாடல் செய்யப்பட்டிருப்பது, தணிக்கையில் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் வேலூா் மாவட்ட நிா்வாகக்குழுவை அதிரடியாகக் கலைத்து அப்போதைய ஆட்சியா் சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.

மேலும், கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டிருந்ததுடன், வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் வேலூா் மாவட்ட செயலராக இருந்த இந்தா்நாத் பயன்படுத்தி வந்த ரெட்கிராஸின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந் நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக வேலூா் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலற்ற நிா்வாகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வேலூா் மாவட்ட கிளைக்கு புதிய நிா்வாகக்குழு தோ்வு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேலூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஆட்சியா் தலைமையில் ஜே.பி.எம்.திருமண மண்டபத்தில் ஜூன் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்பொது குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினா்கள் தங்களது உறுப்பினா் அட்டை, ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றை தவறாமல் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, நிா்வாக குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடைபெற உள்ளதால், இந்த தோ்தலில் போட்டியிடும் நபா்கள் தங்களது வேட்பு மனுவை மே 28, 29-ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலக ‘ஏ’ பிளாக் இரண்டாவது தளத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) வழங்கலாம்.

வேட்புமனு பரிசீலனை, இறுதி வேட்பாளா் பட்டியல் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி - மூன்றாண்டுகளில் 1923 போ் வேலைவாய்ப்பு

வேலூா் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்றி பெற்று 1,923 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜ... மேலும் பார்க்க

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்... மேலும் பார்க்க