செய்திகள் :

6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீா்த்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி.மீ. மழை பதிவானது.

இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாகவுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 26-இல் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும், மே 27, 28-ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 26-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 26-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள் என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா், அனைத்து மருத்... மேலும் பார்க்க

நகைக்கடை ஊழியா் வீட்டில் திருட்டு

திருப்பத்தூரில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒர... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை

சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை : சிறுவன் உள்பட மூவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டித் தெருவில் ஒரு வீட்டில் போதை மாத்திரை, கஞ்சா ஆகியவை பதுக்கி வைத்து விற்பதா... மேலும் பார்க்க

குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை

குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க