செய்திகள் :

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து  அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பது தெரியவந்தது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து ஆரோக்கியசாமி கூறுகையில்,"கோயில்வழி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 60 வயதாகிறது. திருமணம் ஆகவில்லை. எனது வீட்டு அருகில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலுக்குச் செல்லும்போது, அங்குள்ள பூசாரி சிவசுப்பிரமணியம் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் திருமணம் செய்து வைப்பதாக ஆசைகாட்டி பெண் பார்க்க அழைத்துச் சென்றார். மேலும், அந்தப் பெண்ணுக்கு பணத்தேவை இருப்பதாக என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, எனக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.15 லட்சத்தை சிவசுப்பிரமணியனிடம் கொடுத்தேன். இதன் பின்னர், திருமணம் குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனக்குத் திருமணமும் செய்து வைக்கவில்லை.

சில நாட்கள் கழித்துதான் மோசடி செய்து என்னிடம் பணத்தைப் பறித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறினார். அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 60 வயது முதியவருக்கு திருமண ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்தது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மாண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க