செய்திகள் :

Corona: "கொரோனாவால் எந்த உயிரிழப்பும் தற்போது ஏற்படவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

"உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்கக் கூடாது. கொரோனாவைப் பொருத்தவரை 2019 இறுதியிலிருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, காமா பிளஸ், ஒமேக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களைப் பெற்று வந்தது.

தற்போது, வந்துள்ள கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை 19 மாதிரிகள் பூனாவில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூன்று நாட்களிலிருந்து தொண்டை வலி, சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும்.

பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தீராத காய்ச்சல், நீண்ட நாள் தொண்டை வலி, சளி சரியாகாமலிருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பொதுமக்களுக்குப் பொதுவான அறிவுறுத்தலோ, விதியோ, சட்டமோ கட்டாயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்குச் செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால். அது நல்லது. இந்திய அளவில் கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்குப் பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை. 

தனியார் மருத்துவமனை உட்பட எங்கு அனுமதித்தாலும் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று சொல்லும் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது கொரோனா உள்ளிட்ட 12, 13 வகையான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

அதில், ஒன்று, இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாகக் கருத முடியாது. அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை.

கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஒன்றிய சுகாதாரத் துறை விதிக்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Plane Crash : உலகை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025

* "அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது" - ராமதாஸ் * பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார் * கட்சியினரை அவமதிக்கும் அன்புமணி.. வைரல் ... மேலும் பார்க்க

'கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை; பாஜக ஆட்சிதான் என் விருப்பம்.. ஆனாலும்...' - அண்ணாமலை ஓப்பன் டாக்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் கடந்த 11 ஆண்டுகளில் 2 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுக்கப்... மேலும் பார்க்க

'எலானுக்கு மன்னிப்பு உண்டு' - சமாதான கொடியை பறக்கவிடும் ட்ரம்ப், எலான் மஸ்க்; பின்னணியில் என்ன?

00"கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன' - இது நேற்று எலான் மஸ்க் போட்ட பதிவு. 'என்னதிது...?' என்று இந்தப் போஸ்ட் பெரும் ஆச்சரியத்த... மேலும் பார்க்க

"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர் கேள்வி!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நெற் களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் என்றால்... மேலும் பார்க்க