செய்திகள் :

Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

post image

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட மேலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது .

அப்பொழுது புனித ரம்ஜான் மாதம் சென்று கொண்டிருந்ததால் மசூதியில் ஏராளமானோர் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஆறு பேர் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அப்பொழுது இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது

முன்னாள் பா.ஜ.க எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்
முன்னாள் பா.ஜ.க எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்

சாத்வி பிரக்யா

முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறைக்குட்பட்ட மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த சதி செயலுக்கு பின்னணியில் தீவிர ஹிந்து வலதுசாரி குழுக்கள் இருக்கிறார்கள் என கண்டறிந்த மகாராஷ்டிரா காவல் துறையின் இந்த சிறப்பு படையினர், அதில் மிக முக்கியமாக பாஜக முன்னாள் எம்.பி ஆன சாத்வி பிரக்யாவும் ஒருவர் என கண்டறிந்து கைது செய்தது.

அவருடன் சேர்த்து முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித், மேஜர் ரமேஷ் உபாத்தியாயா, அஜய் ரிகர்கர், சுதாகர் தி வேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி உள்ளிட்ட நபர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். பின்னர் இந்த விவகாரம் கடந்த 2011 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை மேற்கொண்டனர். இதில் மேலே சொன்ன ஏழு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு விசாரணை என்பது தொடங்கியது.

என்.ஐ.ஏ - NIA

பிறழ் சாட்சி

கிட்டத்தட்ட 323 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் அதில் 34 சாட்சிகள் பின்னர் பிறழ் சாட்சியங்களாக மாறினார்கள். சுமார் 11 ஆயிரம் ஆவணங்கள், 400 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவையும் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அரசு தரப்பு சார்பில் சுமார் 1,300 பக்கங்களுக்கும் அதிகமான எழுத்துப்பூர்வமான வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மும்பையில் உள்ள என் ஐ எ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நிரூபிக்கப்படவில்லை

இதில் பாஜகவின் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த விவரங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சதி செய்து இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதையும் நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறிவிட்டது.’ உள்ளிட்டவற்றை காரணங்களாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது

மேலும் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் இந்த தாக்குதல் சம்பவத்திற்காக ஆயுத உதவிகளை செய்தார் என்பதையும் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

தீர்ப்பு

`தீவிரவாதத்திற்கு மதம் என்பது கிடையாது'

குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆறு பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம், `தீவிரவாதத்திற்கு மதம் என்பது கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு எதிரான யூகங்களின் அடிப்படையில் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் என்பது தேவை. இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட... மேலும் பார்க்க

`வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை' - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்க... மேலும் பார்க்க

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்று... மேலும் பார்க்க

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்... தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்... மேலும் பார்க்க

மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?

கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்க... மேலும் பார்க்க