செய்திகள் :

Monsoon Session: `எதிர்க்கட்சித் தலைவர்... எனக்கே பேச அனுமதி தரவில்லை’ - ராகுல் காந்தி காட்டம்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை) காலை தொடங்கியது.

அதற்கு முன் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர், பொருளாதாரம், நக்சலிசம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் முதலில் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். கேள்வி நேரத்திற்குப் பிறகு அதுபற்றி விவாதிக்கப்படும்.

மக்களவை
மக்களவை

ஒவ்வொரு எம்.பி.க்கும் சரியான நேரத்தையும் வாய்ப்பையும் நான் வழங்குவேன். ஒவ்வொரு பிரச்னைக்கும் அரசு பதிலளிக்க விரும்புகிறது.

எனவே, இந்த அவை செயல்பட வேண்டும். நீங்கள் யாரும் கோஷம் போட இங்கு வரவில்லை.

விதிமுறைகளின்படி இந்த அவை செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்" என்று கூறினார்.

ஆனால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சிகள் அமளி என பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்திடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச அனுமதிக்கப்படுகிறார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எதாவது பேச எழுந்தால் அனுமதிக்கப்படுவதில்லை.

நான் எதிர்கட்சித் தலைவர். அவையில் பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், எனக்கும் பேச அனுமதி தரவில்லை. இது ஒரு புதிய அணுகுமுறை.

அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசமுடியும்போது, எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

அதேபோல், ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, "விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறதென்றால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.

பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடிய மக்களவை தொடர்ந்து 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகளில் பேசினார். தஞ்சாவூரில் மாநகராட்... மேலும் பார்க்க

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன? * “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?* உச... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரசுப் பணிகளில் கொல்லைப்புற பணி நியமனங்கள்! - சர்ச்சை வளையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத புதுச்சேரி அரசுபுதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் ரங்கசாமியால், பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நு... மேலும் பார்க்க

"இதைக் கூறுபவர்கள் முதலில்..." - சொந்தக் கட்சித் தலைவர் பேச்சுக்கு சசி தரூர் எதிர்வினை!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற... மேலும் பார்க்க